முல்லைத்தீவில் கண்மூடித்தனமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெண்.!

breaking
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் பெண் ஒருவா் குரூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளாா்.  இந்த சம்பவம்  வட தமிழீழம்  முல்லைத்தீவு- மூங்கிலாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு வடக்கு பகுதியை சேர்ந்த வி. காந்தரூபி வயது 49 என்னும் குடும்பப் பெண் அவரது இல்லத்தில் வைத்து நேற்று மாலை அவரது காணவரால் தாக்கப்பட்டு கழுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனைக்காக புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.