“கம்பரலிய“ பதாகைகளில் ஒட்டுக்குழுவின் படங்கள் கிடையாது ரணில் அரசுடன் மறைமுக “டீல்“ மட்டுமே!

breaking
கம்பரலிய எனும் கிராம மீள் எழுச்சி திட்டம் தொடர்பான பதாகைகளில் சிறிலங்கா பேரினவாத அரசின் அரசியல் ஒட்டுக்குழுவான தமிழ்தேசிய கூட்டமைப்பின் படங்கள் இடப்பெற்று பதாகைகள் நடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (08) நடைபெற்றது. மாவட்டச் செயலர் நா.வேதநாயகன், சிறிலங்கா  கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் இணைத்தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திணைக்கள உயர் அதிகாரிகள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ் மாநகர முதல்வரும் ஒட்டுக்குழு உறுப்பினருமான  இ.ஆனொல்ட், உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த கம்பரலிய எனும் கிராம மீள் எழுச்சி திட்டத்தினை பிரச்சாரப்படுத்தவென சிறிலங்கா ஜனாதிபதி,பிரதமர்,அமைச்சர் மற்றும் சிறிலங்கா அரசின் ஒட்டுக்குழுவான கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களென பெயர் பலகை நாட்டப்படுவதில் பெருமளவு பணம் செலவிடப்படுவதாக சீ.வீ.கே.சிவஞானம் கொண்டு வந்த விடயத்தை தொடர்ந்தே அதற்கு தடை போடப்பட்டுள்ளது.
ஏற்கனவே சுமந்திரன் கோவில் குளத்தை தூர் வாரி நாட்டிய பெயர்பலகை சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
  இவ்வாறு சிறிலங்கா அரசின் ஒட்டுக்குழுவாக தாம் வெளிப்படையாக செயற்படுவது மக்களுக்கு தெரியாமலிருக்க கூடியவாறன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அடுத்த தேர்தல் நிறைவுறும் வரை ரணில் அரசின் மறைமுக ஒட்டுக்குழுவாகவே கூட்டமைப்பு செயற்பட இருக்கிறது.