சங்கிலியை அபகரித்த திருடனை ஒரு கிழமைக்குள் கண்டுபிடித்து மூதாட்டி

breaking
  கடந்த வாரம் ஏமாற்­றித் தன்­னி­டம் தங்­கச் சங்­கி­லியை அப­க­ரித்த நபரை மூதாட்டி ஒரு­வர் நேற்­று காவல்துறையிடம் பிடித்­துக் கொடுத்­துள்­ளார் கடந்த பங்­கு­னித் திங்­கள் பொங்­கல் உற்­ச­வத்­துக்­காக அச்­சு­வே­லி­யி­லி­ருந்து மட்­டு­வில் பன்­றித்­த­லைச்சி கண்­ணகை அம்­பாள் கோவி­லுக்­குச் சென்­றுள்­ளார். அப்­போது அவரை உட­ன­டி­யாக அறி­வித்­தல் பந்­த­லுக்கு வரு­மாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவர் அங்கு சென்­ற­போது, அங்கு நின்ற ஒரு­வர் மூதாட்­டி­யின் மகன் விபத்­தில் சிக்கி காய­ம­டைந்து சாவ­கச்­சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளார். மருத்­து­வச் செல­வுக்கு பணம் தர வேண்­டும் என்று அங்கு நின்ற ஒரு­வர் கேட்­டுள்­ளார். மகன் விபத்­தில் சிக்­கி­னார் என்ற பதற்­றத்­தில் பணம் இல்­லை­யெ­னக் கூறி கழுத்­தில் அணிந்­தி­ருந்த 3 பவுண் தங்­கச் சங்­கி­லியை கழற்­றிக் கொடுத்­துள்­ளார். சங்­கி­லியை வாங்­கி­ய­வர் அவ­ச­ர­மாக அங்­கி­ருந்து சென்­றுள்­ளார். சிறி­து­நே­ரத்­தில் அங்கு வந்த மகன் சம்­ப­வத்தை அறிந்து அம்­பா­ளுக்கு நேர்த்தி வைத்­துச் சென்­றுள்­ளார் பங்­கு­னித் திங்­கள் நான்­காம் திங்­க­ளான நேற்று மூதாட்­டி­யும் மக­னும் கோவி­லுக்கு சென்று வழி­பட்­டுக் கொண்­டி­ருந்த வேளை­யில் சங்­கி­லியை வாங்­கிய நபர் அங்கு நின்­றுள்­ளார். அவரை அடை­யா­ளம் கண்டு கொண்ட மூதாட்டி மக­னி­டம் கூறி­யுள்­ளார். மகன் அந்த நப­ரைப் பிடித்து அங்­குள்ள காவல்துறையிடம் ஒப்­ப­டைத்­துள்­ளார். காவல்துறையின் விசா­ர­ணை­யில் மூதாட்­டி­யி­டம் சங்­கி­லியை வாங்­கி­யதை அந்த நபர் ஒப்­புக் கொண்­டார் என்­றும், அதை­ய­டுத்­துப் காவல்துறையினர் அந்த நப­ரைப் காவல் நிலை­யம் கொண்டு சென்­ற­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.