வடதமிழீழம்: யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு நிலாவரைப்பகுதியில் தோட்டத்திலிருந்து வரும் வழியில் வெற்றுக்காணியில் இருந்த கைக்குண்டை விளையாட்டுப்பொருளென கருதி எடுத்த சிறுவன் அதனை வீதியில் எறிந்த போது வெடித்தது.
அதில் படுகாயமடைந்த சிறுவன், உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறுவன் எடுத்த எறிந்த பொருள் கைக்குண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது.