வெயில் கொடுமை மென்பானம் என நினைத்து மண்ணெண்ணைய்யை அருந்திய சிறுவன்

breaking
வெயில் தாகத்தில் மென்பானம் என மண்ணெண்ணையை அருந்திய சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புலம்பெயர் நாட்டிலிருந்து கைதடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்த சிறுவனே மென்பான போத்தலில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணையை மென்பானம் என கருதி அருந்தியுள்ளார். இதனையடுத்த குறித்த சிறுவனை வீட்டார் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.