காணியை ஆக்கிரமித்த பௌத்த மடம் , அனுமதித்த  பிரதேச செயலகம், பாதுகாக்கும் ஶ்ரீலங்கா இராணுவம்

breaking
தனது காணி­யில் தனது அனு­மதி இல்­லா­மல் பௌத்த மடம் அமைக்­கப்­பட்­டுள்­ளது என்று குற்­றஞ்­சாட்­டி­யுள்ள பெண் ஒரு­வர் தனது காணி­யைத் தனக்கு மீளத் தர வேண்­டும் என்­றும் கோரிக்கை விடுத்­துள்­ளார். வவு­னியா, கன­க­ரா­யன்­கு­ளம் பொலிஸ் நிலை­யத்­துக்கு அரு­கில் பௌத்த விகாரை ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. அந்த விகா­ரை­யின் பின்­பு­ற­மாக உள்ள காணி­யில், விகா­ரை­யைப் பரா­ம­ரிக்­கும் பிக்கு மற்­றும் சிலர் தங்­கு­வ­தற்கு இரு விடு­தி­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. தற்­போது இந்­தி­யா­வில் இருந்து நாடு திரும்­பி­யுள்ள பெண் ஒரு­வர் அந்­தக் காணி­க­ளுக்கு உரிமை கோரு­கின்­றார். அந்த இரு விடு­தி­கள் அமைக்­கப்­பட்­டுள்ள 3 ஏக்­கர் காணி தனக்­குச் சொந்­த­மா­னது என்­றும், அந்­தக் காணி­யைத் துப்­பு­ர­வாக்­கச் சென்­ற­போது அரு­கில் நிலை கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னர் தடை­களை ஏற்­ப­டுத்­து­கின்­ற­னர் என்­றும் அந்­தப் பெண் கூறு­கின்­றார். “போரால் இடம்­பெ­யர்ந்து 2006ஆம் ஆண்டு குடும்­பத்­து­டன் இந்­தி­யா­வுக்­குச் சென்­றேன். 2017ஆம் ஆண்டு நான் மீண்­டும் நாடு திரும்­பி­னேன். எனது காணி­யைப் பார்க்­கச் சென்­ற­போது அங்கு இரு கட்­ட­டங்­கள் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. நான் எனது காணி­யைத் துப்­பு­ர­வாக்க முயன்­றேன். காணிக்கு அரு­கில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னர் அதற்­குத் தடை­களை ஏற்­ப­டுத்­து­கின்­ற­னர். அச்­சு­றுத்­தும் வகை­யில் செயற்­ப­டு­கின்­ற­னர். தற்­போது எனக்கு வீட்­டுத் திட்­டம் கிடைத்­துள்­ளது. காணிப் பிரச்­சி­னை­யால் வீட்டை அமைக்க முடி­யா­துள்­ளது. எனது காணிக்­குப் பின்­பு­ற­மாக உள்ள காணி ஒன்­றைத் தரு­கின்­றோம் என்று வவு­னியா வடக்­குப் பிர­தேச செய­லர் கூறு­கின்­றார். ஆனால் அங்கு வசிக்க முடி­யாது. அது காட்­டுப் பகு­தி­யாக உள்­ளது.”- என்று அந்­தப் பெண் தெரி­வித்­தார். இந்த விட­யம் தொடர்­பா­கப் பாதிக்­கப்­பட்ட பெண் மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வில் முறைப்­பாடு செய்­தி­ருந்­தார். அது தொடர்­பான விசா­ரணை நேற்­று­முன்­தி­னம் வவு­னி­யா­வில் நடை­பெற்­றது. காணிக்கு அரு­கில் உள்ள ஶ்ரீலங்கா இரா­ணுவ முகா­மின் பொறுப்­ப­தி­காரி, 56ஆவது படைப்­பி­ரி­வின் மக்­கள் தொடர்­பா­டல் அதி­காரி, பிர­தேச செய­லக அலு­வ­லர் ஆகி­யோர் ஆணைக்­கு­ழு­வால் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்­டி­ருந்­த­னர். எந்த அடிப்­ப­டை­யில் காணி விட­யத்­தில் நீங்­கள் தலை­யி­டு­கி­றீர்­கள்? என விசா­ரணை அதி­கா­ரி­க­ளால் இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­டது. தாம் அந்­தப் பெண்ணை அச்­சு­றுத்­த­வில்லை என்­றும், பிக்கு ஒரு­வர் விகாரை அமைந்த காணியை பரா­ம­ரித்­துத் தர­வேண்­டும் என்று கோரி­ய­மைக்கு அமையே அதைப் பரா­ம­ரித்­தோம். காணி தொடர்­பான அதி­கா­ரங்­கள் தமக்கு இல்­லா­த­தால் இந்த விட­யத்­தில் இருந்து முற்­றாக ஒதுக்­கிக் கொள்­கின்­றோம் என்று இரா­ணு­வத்­தி­னர் தெரி­வித்­த­து­டன், அதை எழுத்து மூல­மும் தந்­த­னர் என்று மனித உரிமை ஆணைக்­குழு அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். இந்த விட­யம் தொடர்­பாக வவு­னியா வடக்­குப் பிர­தேச செய­லர் க.பரந்­தா­ம­னி­டம் கேட்­ட­போது, அந்­தக் காணிப் பிரச்­சினை தீர்க்­கப்­பட்­டுள்­ளது என்­றும், கட்­ட­டம் அமைக்­கப்­பட்­டுள்ள இடத்­துக்­குப் பின்­பு­ற­மாக அமைத்­துள்ள காணி பெண்­ணுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது என்­றும் பதி­ல­ளித்­தார். ஆனால் தனது விருப்­பத்­துக்கு மாறாக அந்­தக் காணி தரப்­பட்­டுள்­ளது என்­றும், தனது காணியே தனக்­குத் தேவை என்­றும் பாதிக்­கப்­பட்ட பெண் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வுக்கு எழுத்து மூலம் வழங்­கிய முறைப்­பாட்­டில் தெரி­வித்­துள்­ளார். இந்­தப் பிரச்­சினை தொடர்­பாக மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வில் கட­மை­யில் இருந்த அதி­கா­ரி­யான சட்­டத்­த­ரணி லீனஸ் வசந்­த­ரா­ஜா­வி­டம் கேட்­ட­போது- முறைப்­பாட்­டா­ள­ரான பெண் இந்­தி­யா­வில் இருந்து நாடு திரும்­பி­ய­வர் என்ற ரீதி­யில் நாம் ஆழ­மான கரி­சனை கொண்­டுள்­ளோம். பிர­தேச செய­ல­கமே இந்த விட­யத்­தில் சரி­யான முடிவை வழங்க வேண்­டும். பௌத்த விகாரை அமைந்­துள்ள 7 ஏக்­கர் காணி 2010ஆம் ஆண்­ட­ள­வில் வவு­னியா வடக்­குப் பிர­தேச செய­ல­கத்­தால் பௌத்த விகாரை அமைக்க வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் அதற்­கு­ரிய உரி­மைப் பத்­தி­ரங்­கள் வழங்­கப்­ப­ட­வில்லை. 2010 ஆம் ஆண்­ட­ள­வில் மீள்­கு­டி­ய­மர்­வு­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் காணி­யின் உரித்­துத் தொடர்­பாக முறை­யாக ஆரா­யாது பிர­தேச செய­ல­கத்­தால் விகாரை அமைக்­கக் காணி வழங்­கப்­ப­ட­டுள்­ளது. இந்த விட­யத்­தில் காணியை உரிமை கோரும் பெண்­ணின் சம்­ம­தத்­து­டன், அவர் விரும்­பும் தீர்வை வழங்­கு­வ­தற்­குப் பிர­தேச செய­ல­கம் முன்­வர வேண்­டும். – என்­றார்.