ஶ்ரீலங்காவின் ஆக்கரமிப்பு மீனவர்கனை தடை செய்ய முடியாது : ம.உ.ஆணைக்குழு தெரிவிப்பு

breaking
  வடதமிழீழம்: யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் கட­லட்டை பிடிப்­ப­வர்­க­ளைத் தடை செய்­வது தொடர்­பாக மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் தீர்­மா­னிக்க முடி­யாது. அவர்­கள் தொழில் செய்­வ­தற்கு அனு­ம­திக்க வேண்­டும் என்று யாழ்ப்­பாண மாவட்ட மனித உரிமை ஆணைக்­கு­ழு­வின் இணைப்­பா­ளர் த.கன­க­ராஜ் யாழ்ப்­பா­ணம் மாவட்­டச் செய­ல­கத்­துக்கு எழுத்­து மூலம் அறி­வித்­துள்­ளார். யாழ்ப்­பா­ணக் குடா­நாட்டு மீன­வர்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தைப் பாதிக்­கும் வகை­யில் கட­லட்டை பிடிப்­பில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளைத் தடை செய்ய வேண்­டும் என்று குடா­நாட்டு மீன­வர்­கள் நீண்­ட­கா­ல­மாக கோரிக்கை விடுத்­து­வ­ருகின்நனர். இந்நிலை­யில் குடா­நாட்­டில் கட­லட்டை பிடித்த தென்­ப­குதி மீன­வர்­க­ளைக் குடா­நாட்­டி­லி­ருந்­தும் வெளி­யேற்­றும் முயற்­சி­கள் எடுக்­கப்­பட்­டன. தென்­னி­லங்­கை­யி­லி­ருந்து வந்து கட­லட்டை பிடித்த நூற்­றுக் கணக்­கான மீன­வர்­க­ளும் ஒரு சில உள்­ளூர் மீன­வர்­க­ளும் கட­லட்டை பிடிப்­ப­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­னர். இது தொடர்­பாக உள்­ளூர் மீன­வர் ஒரு­வர் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வில் முறைப்­பாடு செய்­தி­ருந்­தார். அந்த முறைப்­பாட்டை விசா­ர­ணைக்கு எடுத்த யாழ்ப்­பாண மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வின் இணைப்­பா­ளர், மாவட்­டச் செய­லக அதி­கா­ரி­யை­யும் அழைத்­தி­ருந்­தார். விசா­ரணை முடி­வில் மேற்­கண்ட விட­யத்தை எழுத்­தில் அறி­வித்­துள்­ளார். இதன் கார­ண­மாக மீண்­டும் குடா­நாட்டு மீன­வர்­க­ளின் பொரு­ளா­தா­ரம் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ள­தாக சில மீன­வர்­கள் அச்­சம் தெரி­விக்­கின்­ற­னர். மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இணக்கத்தை ஏற்படுத்தும் அதிகாரம் மட்டுமே இருக்கிறது கட்டளையிடும் அதிகாரம் இல்லை என இது தொடர்பில் சுமந்திரன் கருத்து அதரிவித்துள்ளார்.   ஶ்ரீலங்கா இனவாத அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்து தங்களுக்கான சலுகைகள் பெற்றுக்கொள்ளும் சுமந்திரன் போன்றவர்கள்  தாங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதேசங்களில் நடக்கும் ஆக்கிரமிப்பு விடயங்களையே தீர்க்கத் தெரியாமல் தமிழினத்திற்கு விடிவை பெற்றுத் தரப்போகிறேன் என அறிக்கைவிடுவதும் சட்டத்தரணி என தங்கள் விலாசம் காட்டுவதும் வெட்கக்கேடே