வடதமிழீழம்: யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடலட்டை பிடிப்பவர்களைத் தடை செய்வது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்க முடியாது.
அவர்கள் தொழில் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் த.கனகராஜ் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் கடலட்டை பிடிப்பில் ஈடுபடுபவர்களைத் தடை செய்ய வேண்டும் என்று குடாநாட்டு மீனவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவருகின்நனர்.
இந்நிலையில் குடாநாட்டில் கடலட்டை பிடித்த தென்பகுதி மீனவர்களைக் குடாநாட்டிலிருந்தும் வெளியேற்றும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. தென்னிலங்கையிலிருந்து வந்து கடலட்டை பிடித்த நூற்றுக் கணக்கான மீனவர்களும் ஒரு சில உள்ளூர் மீனவர்களும் கடலட்டை பிடிப்பதிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இது தொடர்பாக உள்ளூர் மீனவர் ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார். அந்த முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்த யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர், மாவட்டச் செயலக அதிகாரியையும் அழைத்திருந்தார். விசாரணை முடிவில் மேற்கண்ட விடயத்தை எழுத்தில் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக மீண்டும் குடாநாட்டு மீனவர்களின் பொருளாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக சில மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இணக்கத்தை ஏற்படுத்தும் அதிகாரம் மட்டுமே இருக்கிறது கட்டளையிடும் அதிகாரம் இல்லை என இது தொடர்பில் சுமந்திரன் கருத்து அதரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா இனவாத அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்து தங்களுக்கான சலுகைகள் பெற்றுக்கொள்ளும் சுமந்திரன் போன்றவர்கள் தாங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதேசங்களில் நடக்கும் ஆக்கிரமிப்பு விடயங்களையே தீர்க்கத் தெரியாமல் தமிழினத்திற்கு விடிவை பெற்றுத் தரப்போகிறேன் என அறிக்கைவிடுவதும் சட்டத்தரணி என தங்கள் விலாசம் காட்டுவதும் வெட்கக்கேடே