பிரான்சில் விறுவிறுப்படைந்துள்ள மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டிகள்!

breaking
ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2019 கடந்த 24.03.2019 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகித் தொடர்ந்து போட்டிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் கிறித்தல் பகுதியில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்றுவருகின்றது.
 கடந்த (31.03.2019) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டியில் ஈகைச்சுடரினை 2000 ஆம் ஆண்டில் கைதடி கோப்பாய் பகுதியில் முன்னகர்ந்த படையினருக்கு எதிரான சமரில் வீரச்சாவடைந்த எல்லைப்படை வீரவேங்கை கலைச்செல்வன் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்தார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு.மகேஸ், பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர் திரு.கிருபா, ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் கி. கிருபானந்தன் மற்றும் விளையாட்டுத்துறை உறுப்பினர்கள் வீரர்களுக்கு கைலாகு கொடுத்து வரவேற்று போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன.
 
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழ – ஊடகப்பிரிவு)