இறுதிப் பங்குனி திங்கள் , திருடர்கள் காட்டில் மழை: 20 பவுண் நகை மாயம்
பங்குனித் திங்கள் இறுதிநாளான நேற்று முன்தினம் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு வந்த பக்தர்களிடம் திருடர்கள் தமது கைவரியைக் காட்டியுள்ளனர். சுமார் 20 பவுண் தங்கநகைகள் திருடப்பட்டுள்ளன.
பங்குனித் திங்கள் இறுதிநாள் வழிபாடு பன்றித் தலைச்சி அம்மன் ஆலயத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அங்கு வந்த பக்தர்களில் 8 பேர் தமது தங்க நகைகளைப் பறிகொடுத்துள்ளனர். 6 பேரிடம் விலையுயர்ந்த அலைபேசிகள் திருடப்பட்டுள்ளன. இவற்றைவிட சிலர் தீர்த்தக் கேணியோரம் வைத்து விட்டு குளிக்கச் சென்ற சமயம் பயணப் பைகளும் திருடப்பட்டுள்ளன.
ஆலயத்துக்கு வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் தங்க நகைகள் அணிவதையும், விலையுயர்ந்த பொருள்களைக் கொண்டுவருதையும் தவிர்க்க வேண்டும் என்று ஆலயத்தினர் ஆரம்பம் முதலே அறிவுறுத்தி வந்தனர். மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக அறிவித்து வந்தனர். இருந்தபோதிலும் நகைகளும், பெறுமதி மிக்கப் பொருள்கள் திருடப்பட்டுள்ளன.