வாள்வெட்டில் ஈடுபட்ட இருவர் கைது: கைக்கோடரி, இலக்கத் தகடற்ற மோட்டார் சைக்கிள் மீட்பு

breaking
  வடதமிழீழம்: மானிப்பாயில் இன்று நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் இரண்டு பேர் மானிப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஆனைக்கோட்டை பிடாரி அம்மன் கோவிலடியில் உள்ள வீடொன்றிலிருந்து இலக்கத்தகடுகளற்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைக் கோடரி மற்றும் வாள் என்பன மீட்கப்பட்டுள்ளன என்றும் காவல்துறையினர் கூறினர். மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியிலுள்ள இரண்டு வீடுகள் உள்பட மூன்று வீடுகளுக்குள் புகுந்த 9 பேர் கொண்ட கும்பல் அடாவடியில் ஈடுபட்டிருந்த்து. இந்த தாக்குதல்களை ஆவா குழுவின் நடத்தினர் என்று காவல்துறையினர் கூறியிருந்தனர்.