முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 10 ஆண்டு நினைவுகூர அழைப்பு!

breaking
தமிழின அழிப்பு நினைவேந்தலான முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வினை செவ்வன நடத்திமுடிக்க அனைவரும் ஒன்றிணையுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளார்கள்.
இது தொடர்பிலான ஊடக சந்திப்பு ஒன்றினை 10.04.19 அன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடத்தியுள்ளார்கள்.
மேலும் பாதுகாப்பு வலயம் என அரசினால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் உள்ளடங்கலான பிரதேச்தில் தமிழீழனம் உள்ளீர்க்கப்ட்டு கொத்துக்குண்டுகள் மனித குலத்திற்கு எதிரான பயன்படுத்த முடியாது என சர்வதேச போரியல் விதிமுறைகளில் விதைந்துரைக்கப்பட்ட பயங்கர ஆயுதங்கள் போர் முறைகள் பயன்படுத்தப்பட்டு குழந்தைகள்,சிறுவர்கள்,முதியவர்கள்,பெண்கள், என்ற வேறுபாடுகள் கடந்து தமிழீனம் பதைபதைக்க துடிதுடிக்க கொடூரமாக கொண்டொளிக்கப்பட்டு தசாப்தம் ஒன்று நிறைவடைந்துள்ளது.
இன்றுவரைக்கும் கூட இந்த இன அழிப்பு நடவடிக்கைகள் வடிவம் மாற்றம் பெற்று தொல்லியல்திணைக்களம்,வனபரிபாலன திணைக்களம்,மகாவலி அபிவிருத்தி அதிகார சபை என்பற்றினூடாக தமிழர் பாரம்பரியமாக வாழ்ந்த வாழ்நிலங்களை வன்பறிப்புச்செய்வதும், தமிழினத்தின் தொன்மை பெருந்திய வரலாற்று சின்னங்களையும் மரபுரிமை ஆதாரங்களையம் அழிப்பதும் திரிபடையச்செய்வதுமாக் தொடர்கின்றன.
எம்மால் மிகுந்த நம்பிக்கையோடும் எதிர்பாப்போடும் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைமைகளால் இவைதொடர்பில் போதுமான முன்னெடுப்புக்கள் செயற்படுத்தப்படவில்லை என்பது வேதனை தரும் விடையம்,
எனவே எமது இனம் துடிக்க அழிக்கப்பட்ட இந்த தசாப்தத்தின் நிறைவை எந்தவித அரசியல் தலையீடுகளும் முனைப்புக்களும்,மேடைப்பேச்சுக்களும் இன்றி அமைதியான சூழலில் எம் உறவுகளை நினைத்து அவர்கள் இறுதியாக வாழ்ந்து மரணிக்க செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் நின்று வேற்றுமைகளை கடந்து நாம் கண்ணீர் விட்டு அழ எங்கள் இதயத்தின் ஆறாத காயங்களாக சிறிது கழுவிக்கொள்ள இதனூடே சர்வதேசத்திற்கும் இந்த இன அழிப்பு தொடர்பான உண்மையை உணர்த்த முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த இறந்து போன உறவுகளின் உறவுகள் சமயத்தலைவர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் குழுவினை அமைத்துள்ளோம்.
எந்தவொரு கட்சி பின்னணியும் அற்ற குறுகிய நோக்கங்களை கடந்து இந்த அமைப்புடன் இணைந்து முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தலை செவ்வென நடத்தி முடிக்க ஒன்றிணையுமாறு அனைவரையும் அழைக்கின்றோம்
இந்த நினைவேந்தல் தொடர்பில் பல்வேறு தளங்களிலும் நிதி சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அவதானிக்கவும் அறிந்து கொள்ளவும்முடிகின்றது.
நிகழ்வு தொடர்பான நிதி நடவடிக்கைகளை முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் குழுவே மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்கள்