யாழில் திடீரென உயிரிழந்த இளைஞன்!

breaking
யாழ்.உடுவில் கிழக்கு சுன்னாகம் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் விஸ்ணுதாஸ் (வயது 21) எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன்  கடந்த திங்கட்கிழமை வழமை போல் வேலை முடிந்து வீடு திரும்பிய பின்னர் , இரவு உணவை உட்கொண்டு விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார். மறுநாள் காலையான  செவ்வாய்க்கிழமை நீண்ட நேரமாகியும் மகன் எழும்பாததை அடுத்து தாயார் சென்று எழுப்ப முற்பட்டுள்ளார். அ தன் போது அசைவின்றி மகன் காணப்பட்டதை அடுத்து , உடனடியாக மகனை வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதிலும் , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.