வைகோவின் வாய்க்கு பூட்டு!

breaking
ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ அவர்கள் இந்த முறை தேர்தலில் களமிறங்கவுள்ளநிலையில் ஈழம் தொடர்பில் எந்த ஒரு வார்த்தைகளும் தேர்தல் பிரச்சாரங்களில் உச்சரிக்கப்படவில்லை என தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளனாக இருந்த அவர் முன்னையக காலத்தில் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த காரணத்தால் தமிழகத்தில் பலம்வாய்ந்த அரசியல் கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் மீண்டும் காங்கிரஸ் திமுக கூட்டணியுடன் சேர்ந்து மக்கள் ஆணையினை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மக்கள் ஆணையினை பெறும் நோக்கில் தமிழகத்தின் அரசியல்வாதியாக மக்கள் பிரதிநிதிகளாக அங்கிகாரம் தேவை என்பதை வலியுறுத்தி ஈழத்தமிழர் தொடர்பில் எந்த ஒரு வார்தையினையும் தேர்தல் பரப்புரைகளின் போது பேசவில்லை என தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.