வடதமிழீழம்: யாழ்ப்பாணத்தில் இருந்து கைதடி வடக்கு வரை இடம்பெற்ற பேருந்துச் சேவையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் செ.ஜெயபாலன், சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளரிடம் முன்மொழிவைச் சமர்ப்பித்துள்ளார்.
குறித்த பேருந்து தினமும் நான்கு தடவைகள் சேவையில் ஈடுபட்டு வந்தது. தற்போது இந்த சேவைகள் நிறுத்தப்பட்டதால் கைதடி வடக்கு, நவபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட அரச பணியாளர்கள், பொது மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.