பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பழுதடைந்த மென்பானங்கள்

breaking
  வடதமிழீழம்: யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மென்பானங்கள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் பெரும் அமளி துமளி ஏற்பட்டது. சபையின் சிறப்பு அமர்வில் உறுப்பினர்களுக்கு குவளையில் அடைக்கப்பட்ட மென்பானங்கள் வழங்கப்பட்டன. அதனை அருந்துவதற்கு உடைத்த போது மென்பானத்துக்குள் பெருமளவு துகள்களும், குவளையை சுற்றி தூசியும் படிந்து காணப்பட்டன.