உலகை ஏமாற்றும் மைத்திரி முண்டு கொடுக்கும் ஒட்டுக்குழு கூட்டமைப்பு!

breaking
வடகிழக்கு மாகாணங்களில் 2457 ஏக்கா் தனியாா் காணிகள் சிறிலங்கா படையினா் வசம் உள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி கூறிய தகவல் அப்பட்டமான பொய் என மாவட்ட செயலகங்களின் புள்ளி விபரங்கள் ஊடாக தொியவந்துள்ளது. வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளின் நில விடு­விப்பு சம்­பந்­த­மான தற்­போ­தைய நிலைமை, மற்­றும் தீர்வுகள்பற்றி மக்­கள் பிர­தி­நி­தி­கள், சிறிலங்கா ஆக்கிரமிப்பு படை­யி­னர் இடை­யில் கடந்த 3ஆம் திகதி இடம்­பெற்ற வடக்கு கிழக்கு அபி­வி­ருத்­திச் செய­ல­ணி­யில் ஆராயப்பட்­டது. இதன்­போதே குறித்த அளவை அரச தலை­வர் தெரி­வித்­தார். எனி­னும், யாழ்ப்­பா­ணம் மாவட்­டத்­தில் மட்­டும் 2 ஆயி­ரத்து 642 ஏக்­கர் நிலம் படை­யி­ன­ரின் வசம் உள்­ளது. மன்­னார் மாவட்­டத்­தில் 211 ஏக்­கர் நிலம் படை­யி­ன­ரின் வசம் உள்­ளது. இதே­போன்று கிளி­நொச்சி மாவட்­டத்­தில் ஆயி­ரத்து 132 ஏக்­கர் நில­மும், முல்­லைத்­தீ­வில் 101 ஏக்­கர் தனி­யார் நில­மும் படை­யி­ன­ரி­டம் உள்­ள­தோடு வவு­னியா மாவட்­டத்­தில் 56 ஏக்­கர் தனி­யார் நிலம் படை­யி­ன­ரி­டம் உள்­ளது. இதன்­படி வடக்­கில் மட்­டும் 4 ஆயி­ரத்து 142 ஏக்­கர் நிலம் படை­யி­ன­ரி­டம் இருப்­பது உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்வாறு அனைத்து வகையிலும் பொய்கூறி சர்வதேசத்தை ஏமாற்றிவரும் இந்த பேரினவாத அரசிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எனும் தமிழர் பிரதிநிதிகள் முண்டுகொடுக்கிறார்கள் என்பதே கவலை.