புலம் பெயர் தமிழர்களின் காசில் கலர் காட்டும் இனஅழிப்பு இராணுவம்

breaking
  புலம்பெயர்ந்தவர்களின் தமிழர்களால் அனுப்பப்பட்ட நிதியில் வடதமிழீழம், யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் 9 குடும்ங்களுக்கு மலசலகூடங்கள் அமைத்து வழங்கப்பட்டதுடன், 75 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் இன அழிப்பு இராணுவத்தினரால் வழங்கப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் ஆக்கிரமிப்பாக நிலைகொண்டுள்ள ஶ்ரீலங்கா இராணுவ படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியி இங்கிலாந்தில் வசிக்கும் வைத்தியர் வாசுகி ஹரிகரன், பிரபா லோகேஸ்வரன் ஆகியோர் வழங்கிய நிதியுதவியை தங்களுடையதாக காட்டி தமிழ் மக்களுக்கு குறித்த உதவியை செய்துள்ளனர்.     தமிழ் மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர்  நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஶ்ரீலங்கா இராணுவம் புலம் பெயர் தமிழர்களின் நிதிப் பங்களிப்பை தங்களதாக காட்டி உதவி செய்வதும் அவற்றை செய்தியாக வெளியிடுவதும் வெட்கக் கேடானதே