லண்டன் விமான நிலையத்தில் 4 ஈழத்தமிழர்கள் கைது !

breaking
லண்டனில் நான்கு இலங்கையர்களை அந்நாட்டுப் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லண்டன் – லுடன் விமான நிலையத்தில் வைத்து இலங்கை பிரஜைகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள. கடந்த புதன்கிழமை இவர்கள் சர்வதேச விமானம் ஒன்றின் மூலம் லுடன் விமான நிலையயத்தை வந்தடைந்துள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது கைது செய்யப்பட்ட நால்வரிடமும் அந்த நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.