கடும் வறட்சியால் புதுக்குடியிருப்பில்18 கிராமங்கள் பாதிப்பு!

breaking
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசம் வறட்சியால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள அதிகளவான வெப்பநிலை காரணமா புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான மக்கள் குடிதண்ணீரினை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலகிராமங்களில் கிணறுகளில் நீர் வற்றிகாணப்படுவதாகவும் இதனால் தண்ணீரினை பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்தி
ய நிலையத்திற்கு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 18 கிராமங்கள் வறட்சியினால் பதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 1967 குடும்பங்களை சேர்ந்த 6296 அங்கத்தவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான குடிநீரினை வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்ளது