வீடுவீடாக பணப்பட்டுவாடா: அதிமுகவை சேர்ந்த இருவர் கைது.!

breaking
மதுரை நாராயணபுரத்தில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்த அதிமுகவினர் 2 பேர் சிக்கினர்.  பணப்பட்டுவாடா செய்வதாக வந்த புகாரை அடுத்து பறக்கும் படை அதிகாரிகள் இருவரையும் பிடித்தனர். அதிகாரிகளிடன் சிக்கிய இருவரிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் வாக்காளர் பட்டியல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுகவினர் இருவர் மீது தல்லாகுளம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.