சந்தேகத்தின் பேரில் எண்மர் கைது: ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகம்

breaking
  ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், 8 பேரை மானிப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மானிப்பாய், உடுவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களையே காவல்துறையினர் இன்று (திங்கட்கிழமை) கைது செய்துள்ளனர். குறித்த பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டபோது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் மானிப்பாய் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் மானிப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.