துணுக்காய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

breaking
வடதமிழீழம் முல்லைத்தீவில் நேற்று துணுக்காய் ஐயங்கன்குளத்தில் இருந்து கள்விலான் எனும் இடத்திற்கு மணல் ஏற்று வதற்கு உழவு இயந்திரம் தடம்புரட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளார்கள். குறித்த மணல் ஏற்றிய உழவு இயந்திரம் துணுக்காய் சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதில் பழைய முருகண்டியைச்சேர்ந்த குகனேஸ்வரநாயகம் நிசாந்தன் வயது 27 மற்றும் ஐயன்கன்குளத்தைச்சேர்ந்த நவரத்தினம் நவநீதன் 27 சிவகணேசமூர்த்தி சிவரூபன் 27 மற்றும் இருவர் இதில் நால்வர் காயமடைந்து மல்லாவி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் வழியில் கு.நிசாந்தன் உயிர் இழந்துள்ளார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நால்வரில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள் உயிரிழந்தவரின் உடலம் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளார்கள் இந்த விபத்து குறித்து மல்லாவி பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்