தமிழகத்தின் தேர்தல் பரப்புரை இன்றுடன் ஓய்கின்றது!

breaking
தமிழகத்தில் மக்களவைப் பொதுத் தேர்தல் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப்.16) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. வரும் 18-ஆம் தேதி காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். மக்களவைப் பொதுத் தேர்தல் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அறிவிப்பு கடந்த மார்ச் 10-இல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிரம் காட்டிவருகின்றார்கள் இன்று மாலை வரை சூடுபறக்கும் தேர்தல் பரப்புரையில் அனைத்து கட்சி தலைவர்களும் ஈடுபட்டுவருகின்றார்கள். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மாலை 6 மணிக்குப் பிறகு தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டங்கள் ஊர்வலங்களை நடத்தவோ அதில் பங்கேற்கவோ கூடாது. தேர்தல் தொடர்பான எந்த பிரசார காட்சிகளையும் ஊடகங்களின் வாயிலாக வெளியிடக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.