குப்பைக்கு வைத்த தீ மரங்களுக்கு பரவியது: 3 மணி நேர போராடி கட்டுப்படுத்தப்பட்டது

breaking
  குப்பைக்கு வைத்த தீ மரங்களுக்கு பரவியதால் சுமார் மூன்றரை மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. காரைநகர் சுயம்பு வீதியில் , காரைநகர் இந்துக்கல்லூரிக்கு முன்பாக உள்ள காணியில் குப்பைகளை குவித்து அதற்கு தீ மூட்டியுள்ளனர். குறித்த தீ வேகமாக எரிந்து அருகில் இருந்த பனைமரங்கள் மற்றும் ஆல மரம் என்பவற்றுக்கு பரவியுள்ளது. அதனை அடுத்து மின்சார சபைக்கு அறிவித்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதேவேளை காரைநகர் பிரதேச சபைக்கும் அறிவிக்கப்பட்டது. பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என தீயை கட்டுக்குள் கொண்டுவர பெரும் முயற்சி எடுத்தனர். மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையில் போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.