திருகோணமலை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கவனயீர்ப்பு .!

breaking
தென்தமிழீழம்,திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளால் எதிர்வரும் 27-04-2019 அன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இடம் -திருகோணமலையில் கடந்த 2006 ம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 2 ம் திகதி ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கடற்கரை காந்தி சிலைக்குமுன்பாக 27-04-2019 அன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகி, மனித உரிமைகள் ஆணையக அலுவலகம் வரை சென்று அறிக்கை சமர்ப்பிப்பது. இந்தப் போராட்டத்திற்கு எட்டு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளும், எந்த வித கட்சி வேறுபாடின்றி சகல அரசியல் கட்சி பிரமுகர்களும், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரமுகர்களும், பொது அமைப்புகளும், பல்கலைக்கழக மாணவர்கள், பொது மக்கள் அனைவரும் எங்கள் போராட்டத்திற்கு வருகை தந்து எங்களுக்கு ஒத்துழைப்பும் , ஆதரவும் வழங்க வேண்டுமென்றும், கேட்டுக் கொள்கின்றோம்