கனிமொழி வீட்டில் ரெய்டு.. நடந்தது என்ன..?

breaking
எப்படியாகினும் நாங்கள் வெற்றிப் பெறுவோம்.. கடலிலும் தாமரையை மலர வைப்போம்." என தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளரும், தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறியதை ஆமோதித்து எதிர் வேட்பாளரான கனிமொழி வீட்டிலும், அலுவலகத்திலும் ஒரு சேர ரெய்டு நடத்தி மிரட்டி பயமுறுத்தியுள்ளது மத்திய அரசின் வருமான வரித்துறை மதிமுக தலைவர் வைகோவுடன் இணைந்து கோவில்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு கனிமொழி தூத்துக்குடியிலுள்ள குறிஞ்சி நகர் பகுதியில் தனது இல்லத்திற்கு திரும்பி தன்னுடைய கணவர் அரவிந்தன், மகன், வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தின் மகனான மனுராஜ், பிரவீன், உதவியாளர் சரவணன் மற்றும் பலருடன் ஆலோசனையில் இருந்த அதே வேளையில், சரியாக இரவு 08.15 மணியளவில் மதுரை வருமானவரித்துறை உதவி ஆணையர் அடங்கிய டீம், திருநெல்வேலி வருமானவரித்துறையை சேர்ந்த உதவி ஆணையர் கார்த்திகா உள்ளிட்ட டீம் மற்றும்  உள்ளூர் தேர்தல் கண்காணிப்பாளர் டீமுமாக மொத்தம் 24 நபர்கள் உள்ளடக்கிய பெரும் குழு 5 வாகனங்களில் வந்திறங்கி திமுக வேட்பாளரின் வீடு மற்றும் அலுவலகத்தினை ஒரு சேர சோதனையிடுவதாக அறிவித்து, பதிலை எதிர்பார்க்காமலே சோதனையிட ஆரம்பித்தது.

மொத்தமே 6 அறைகள் உள்ள அந்த வீட்டில் பல தடவை சுற்றிப்பார்த்தும் எதிர்ப்பார்த்தது ஒன்றும் கிடைக்கவில்லை வருமானவரித்துறையினருக்கு..! இதே நேரத்தில் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் அனிதா ராதாகிருஷ்ணனும், கீதாஜீவனும் தங்களுடைய ஆதரவாளர்களுடன் அங்கு வந்து சேர வருமான வரித்துறையினருக்கும், ஆளுங்கட்சி மற்றும் பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு எதிரான கோஷங்கள் முழங்கின.. எனினும் சோதனையை கைவிடவில்லை அந்த டீம்..

போதாக்குறைக்கு பத்திரிகையாளர்களை மிரட்டியது. மிகுந்த எதிர்ப்பார்ப்புக்களுக்கிடையே அந்த அறையை திறக்கும் போது கிடைத்தது என்னவோ, கலைஞர் எழுதிய "நெஞ்சுக்கு நீதி" புத்தகங்கள் 40. இந்தே வேளையில் வேட்பாளருக்கு தலைமைத் தேர்தல் ஏஜென்டான மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் அன்பு நிதியும் அங்கு வந்து சேர, " யாரைக்கேட்டு வந்தீர்கள்..? எதனால் இந்த சோதனை.? உங்களுக்கு என்ன கிடைத்தது.? எதுக்கு இத்தனை மணி நேரம் இங்கு இருக்கிறீர்கள்..? போன் வந்தததால் சோதனையிட வந்ததாக கூறுகிறீர்கள்.? அப்படி யார் போன் செய்தாலும் சோதனையிடுவீர்களா.?" என பலரும் சவுண்ட் விட, சுமார் இரண்டே கால் மணி நேரம் கழித்து சோதனையை முடித்துக்கொண்டதாக அறிவித்தது அந்த டீம்.

இங்கிருந்து என்ன எடுத்தீர்கள்..? அதற்கு எழுதிக் கொடுங்கள் இல்லையெனில் எதுவும் எடுக்கவில்லையெனில் அதனையும் எழுதிக் கொடுங்கள்." என திமுகவினர் வருமானவரித்துறையிடம் மல்லுக்கட்ட, "தாங்கள் ஒன்றும் கைப்பற்றவில்லை" என எழுதிக்கொடுத்து அங்கிருந்து நகர்ந்தனர் அவர்கள். இதேவேளையில் பத்திரிகையாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலினோ, " ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் முறையாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை; வரும் காலங்களில் தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் ஏற்படுத்த வேண்டும் என்பது என் கோரிக்கை” என்று தெரிவித்த வேளையில் தூத்துக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்த கனிமொழியோ., " தூத்துக்குடியில் எங்களை பயமுறுத்துவதாக நினைத்துக் கொண்டு சோதனை நடத்தி இருக்கிறார்கள். எந்தவித அடிப்படையும் இல்லாமல் சோதனை நடத்தி இருக்கிறார்கள்.தேர்தலை நிறுத்திவிடலாம் என்ற நப்பாசையில் சோதனை நடத்தி இருக்கிறார்கள். ஆனால், இதற்கெல்லாம் நீங்கள் அஞ்ச மாட்டோம். எதிர்க்கட்சிகளை பயமுறுத்த ஐடி துறையை கையில் வைத்துக் கொண்டு பிரதமர் மோடி இதை செய்திருக்கிறார். அந்த அச்சம் எங்களுக்கு உள்ளது." என கவலைப்பட தெரிவித்தார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.