கடும் வெய்யில் காரணமாக மயக்கமடைந்து வீழ்ந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

breaking
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் ஆடு மேய்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கடும் வெய்யில் காரணமாக மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
முள்ளியவளை 01 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 51 அகவையுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவப்பிரகாசம் தயானந்தன் என்பவனர் ஆடுகளை மேய்த்துக்கொண்டு ஆடுகளுக்கு இலை வெட்டி கையில் எடுத்துவந்த வேளை மயக்கம் அடைந்து நிலத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று 17.04.19 மாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது மாலை 5.00 மணிக்கே இவர் உயிரிழந்திருந்தமை அயலவர்களால் கண்டறியப்பட்டு பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இவரது உயிரிழப்பு தொடர்பில் முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் உடலம் இனம் காணப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வவுனியா மருத்துவமனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் உடலத்தினை வைத்திருப்பதற்கான போதிய குளிர்சாதன வசதிகள் இல்லாத காரணத்தால் வெளிமாவட்டங்களுக்கு உடலங்கள் அனுப்பும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனை காணப்படுகின்றமை மரணம் நிகழும் குடும்பஸ்தினரை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.