ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரை பலியெடுத்த விபத்து!

breaking
பதுளை மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இவ் எண்ணிக்கையில் இரட்டை குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர். இந்த விபத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கருவப்பங்கேணி முதலாம் குறுக்கு வீதியைச் சேர்ந்த லிஸ்டர் (34வயது), அவரது மனைவி நிசாலி (27வயது), அவர்களது இரட்டைக்குழந்தைகளான மூன்று வயதுடைய பைஹா, ஹனாலி ஆகியோரும் நிசாலியின் தாய் தந்தையரான ரெலிங்டன் ஸொப்ஸ் (56வயது), செல்பியா (53வயது) ஆகியோரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.