ஸ்ரீலங்காவின் கிரிபத்கொட – மாகொல பகுதியில் 5 கிலோகிராம் ஹெரோயினுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹெரோயினுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனியை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
‘தெமட்டகொட சுத்தா’ எனும் நபரொருவரால் குறித்த கடத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.