நாட்டு வெடி குண்டு வெடித்ததால் சென்னையில் பரபரப்பு.!

breaking
ஐசிஎப் ராஜிவ்காந்திநகர் முதலாவது தெருவில் பாழடைந்த கட்டிடத்தில் வெடிபொருட்கள் வெடித்ததில் சிறுமி படுகாயமடைந்துள்ளார். 2 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூரை சேர்ந்த சிறுமி காயத்திரி (11). நேற்று மாலை ஐசிஎப் ராஜிவ்காந்தி நகர் முதலாவது தெருவில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் அருகே காயத்திரி நடந்து செல்லும் போது தீடீர் என்று பாழடைந்த கட்டிடத்தில் இருந்து வெடிபொருட்கள் வெடித்து சிதறியது. இதில் காயத்திரி படுகாயம் அடைந்தார். அருகில் இருந்த அக்கம்பக்கத்தினர் காயத்திரியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தகவல் அறிந்த ஐசிஎப் போலீசார், பாழடைந்த கட்டிடத்தை ஆய்வு செய்த போது, 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கிய நபர்கள் யார்? என ஐசிஎப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.