ஸ்ரீலங்காவில் புதையல் தோண்டி ஆறுபேர் கைது!

breaking
ஹொரவப்பொத்தானை, துடுவெவ கபுகொல்லேவ பிரதேச்தில் புதையல் பெற்றுக் கொள்வதற்காக அகழ்வில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹொரவப்பொத்தானை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள், துடுவெவ, பொலன்னறுவை மற்றும் தம்புளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.