யாழ் நல்லூர் ஆலய வளாகத்திற்கு பொலீஸ் பாதுகாப்பு!

breaking
கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற்ற தொடா் குண்டு வெடிப்புக்களை தொடா்ந்து நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது நல்லூர் ஆலய வெளி வீதியில் குவிக்கப்பட்டுள்ள ஏராளமான பொலிஸார் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நல்லூர் வெளி வீதியில் உள்ள வியாபார நிலையங்கள் மீதும் தீவிர சோதணை நடவடிக்கையினை மேற்கொண்டு வரும் பொலிஸார், வெளியில் இருந்து வருபவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், சந்தேகத்திற்கு இடமான முறையில் எவரேனும் நடமாடினால் தமக்கு தகவல் வழங்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.