ஸ்ரீலங்காவின் கொழும்பிலும் தமிழர் தாயமான மட்டக்களப்பின் தேவாலயம் ஒன்று உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் மூன்று மற்றும் மூன்று ஹோட்டல்கள் மற்றும் தெஹிவளை மிருக காட்சி சாலைக்கு அருகில் உள்ளிட்ட ஏழு இடங்களில் இடம்பெற்ற ஏழு வெடிப்புச் சம்பவங்களில் 185பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதில் 9 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவங்களில் நாட்டிலுள்ள பல்வேறு வைத்தியசாலைகளிலும் காயமடைந்த சுமார் 500 இற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
காயமடைந்தவர்களில் 13 வெளிநாட்டவர்களும் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.