யாழ்.மாவட்டத்தில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு, விசேட பூசைகள் நிறுத்தம், அதிரடிப்படை ரோந்து..

breaking
கொழும்பு மற்றும்   மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற்ற தொடா் குண்டு வெடிப்புக்களை தொடா்ந்து வட தமிழீழம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னாா் மற்றும் வவுனியா மாவட்டங்களில் தேவாலயங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், விசேட பூசை வழிபாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளது. ஈஸ்டா் தினமான இன்று காலை கொழும்பிலும், மட்டக்களப்பிலும் தேவாலயங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட 6 இடங்களில் பாாிய குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்நிலையில் நாடு பூராகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு முப்படையினா் களத்தில் இறக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் சகல தேவாலயங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் தேவாலயங்களில் விசேட பூசைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை யாழ்.மறைமாவட்ட ஆயா் இல்லத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெறுவதுடன், விசேட அதிரடிப்படையினா் ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றனா்.