முல்லைத்தீவில் படை பாதுகாப்பு அதிகரிப்பு !

breaking
நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளையடுத்து முல்லைத்தீவின் அனைத்து தேவாலயங்களுக்கும் ஆயுதம் தாங்கிய இராணுவ மற்றும் பொலிஸ்  பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது இன்றையதினம் காலை கொழும்பு,மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பையடுத்து பலர் பலியாகியுள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர் . இந்த நிலையில் இன்றையதினம் கிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறு தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் முல்லைத்தீவில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பை வழங்கியுள்ளனர் .