புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் வாள்வெட்டுக்குழுக்களின் அட்டகாசம்!

breaking
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் இரவு நேரங்களில் வாள்வெட்டுக்குழுக்ளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
கடந்த 20.04.19 அன்று இரவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் அ பகுதியில் வீடு ஒன்றிற்குள் புகுந்த இனம்தெரியாத பல நபர்கள் வீட்டின் படலையினை அடித்து உடைத்துவிட்டு வீட்டிற்குள் புகுந்து ஜன்னல் கண்ணாடியினை அடித்து நொருக்கி வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளார்கள்.
வீட்டில் இருந்து இரண்டு குடும்ப பெண்களும்,மற்றும் மகன் ஒருவரும் தப்பிவெளியில் ஓடிவிட்டதால் உயிர்தப்பியுள்ளார்கள்.
சுமார் முப்பதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் இவ்வாறு குழுவாக சென்று மக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடச்சியாக இடம்பெற்று வருகின்றன பாதிக்கப்படுபவர்கள் அச்சம் காரணமாக பொலீசில் முறையிட தயங்குகின்றார்கள்
மூங்கிலாற்று பகுதியினை சேர்ந்த வாள்வெட்டுக்குழுஒன்றும் வள்ளிபுனம் பகுதியினை சேர்ந்த வாள்வெட்டுக்குழு ஒன்றும் புதுக்குடியிருப்பு கைவேலி,தேவிபுரம் பகுதிகளில் சனி,ஞாயிறு நாட்களில் இரவுவேளைகளில் அட்டகாசம் புரிவதாகவும் வீடுகளுக்குள் சென்று தாக்குதல் நடத்துவுதுடன் வீதியால் செல்லும் இளைஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வாரம் தோறும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு வருகின்றார்கள்
வாள்வெட்டு குழுக்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது இதனால் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் வாள்வொட்டுக்குழுவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு குழுவாக செயற்படும் வாள்வெட்டு கும்பலின் நடவடிக்கைகள் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசில் முறையிட்டும் பொலீசார் கட்டுப்படுத்த  நடவடிக்கை எடுக்காத நிலை தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.