முல்லைத்தீவில் தேவாலயங்கள் பள்ளிவாசல்களில் ஆயுதம் தாங்கிய படையினர்!

breaking
முல்லைத்தீவு மாவட்டத்தில் அனைத்து தேவாலயங்கள் பள்ளிவாசல்களில் ஆயுதம் ஏந்திய படையினர் பாதுகாப்பில்!
கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பினை தொடர்ந்து நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு தலங்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு ஆயுதம் ஏந்திய படையினர் மற்றும் பொலீசார் பாதுகாப்பு கடமைகளில் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு,புதுக்குடியிருப்பு,இரணைப்பாலை,முல்லைத்தீவு நகர் மற்றும் நீராவிப்பிட்டி,முள்ளியவளை,தண்ணீரூற்று,அளம்பில்,செம்மலை உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள தேவாலயங்கள் மற்றும் முஸ்லீம் பள்ளிவாசல்களில் ஆயுதம் ஏந்திய படையினர் மற்றும் பொலீசார் பாதுகாப்பு கடமைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளார்கள்.
இரவு நேரங்களில் பொலீசார் வீதிகளில் நிறுத்தப்பட்டு வீதிச்சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றார்கள்.
இதேவேளை வீதிகளில் மக்களின் நடமாட்டங்கள் குறைந்துள்ளமையினை அவதானிக்கமுடிந்துள்ளது.