மக்களின் சாவை ஓட்டாகப் பார்க்கும் மோடி.?

breaking
 மகாராஷ்ட்ராவின் திண்டோரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய அவர், ஈஸ்டர் தினம் அன்று  இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததையும், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையும் சுட்டிக்காட்டினார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற குண்டுவெடிப்புகள் நாடு முழுவதும் நடந்ததாகக் குறிப்பிட்ட நரேந்திர மோடி, குண்டுவெடிப்பு நடக்கும்போதெல்லாம், பாகிஸ்தான் தான் காரணம் என கூறி உலக நாடுகளிடம் கண்ணீர் சிந்துவதையே மத்திய அரசு வழக்கமாகக் கொண்டிருந்ததாக விமர்சித்தார். தமது ஆட்சிக்காலத்தில் ராணுவத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால், தீவிரவாதிகள் அவர்களது கோட்டைக்குள்ளேயே தாக்கப்படுவதாக மோடி கூறினார். பாஜகவுக்கு வாக்களிப்பதன் மூலம், இந்தியா மேலும் வலிமை பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.