ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி விலகினார்!

breaking
ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த ஹேமசிறி பெர்னாண்டோ  இன்று மாலை பதவி விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னதாக அவர் ஜனாதிபதி மைதிரிபாலசிறீசேனா அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள அதிகாரிகளினால் இடம்பெற்றுள்ள தவறுகளை பொறுப்பேற்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதிவியில் இருந்து விலகியுள்ளதாக ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள புலனாய்வு திணைக்களங்களில் தவறுகள் இடம்பெற்றுள்ளதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் அறிவித்துள்ளார். கொழும்பு மட்டக்களப்பு உள்ளிட்ட இங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிற்கு ஸ்ரீலங்காவின் பாதுப்பு பலவீனங்களே காரணம் என பலதரப்பட்டவர்கள் குற்றம் சாட்டிவரும் நிலையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியினை விலகியுள்ளார்.