மேலும் பலதாக்குதல்கள் தொடரும் அமேரிக்க தூதரகம் எச்சரிக்கை!

breaking
இலங்கைக்கான அமேரிக்க தூதுவர் அலியான டெப்லிட்ஸ் றியூட்டர் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இலங்கையில் நடந்த தாக்குதல் சம்பவங்கள் மேலும் தொடரும் எனவும் இந்த கதை முடிந்தாக தான் கருதவில்லை எனவும் தெரவித்துள்ளார். சிறிலங்கா படையிணர் தாம் பாதுகாப்பை பலப்படுத்துவதாக கூறுகின்ற போதிலும் முஸ்லீம் மக்களுடைய புனித ரம்ழான் தினத்திற்கு முன்னதாக தாக்குதல் நடக்க வாய்ப்பிருப்பதாக அமேரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். அதே வேளை தாம் முற்றுமுழுதாக தாக்குதல் நடத்திய குழுவை செயலிழக்க செய்யவில்லை எனவும் தெரிவித்திருந்தார். குறிப்பாக சிறிலங்கா பாதுகாப்பு படையிணர் தற்போது தம் முழு வலையமைப்பையும் பிடித்து விட்டதாக அறிவித்திருந்த வேளையில் அமேரிக்க தூதுவரின் இந்த கருத்து சிறிலங்கா படியிணரின் பாதுகாப்பு பலவீனத்தை குறிப்பதாகவே இருக்கின்றது.