கொழும்பு குண்டுவெடிப்பு சென்னையில் மூவர் கைது!

breaking
கொழும்பு குண்டுவெடிப்பு சென்னையில் மூவர் கைது! ஸ்ரீலங்காவின் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் குண்டு வெடிப்பு தாக்குதல்களை நடத்திய முஸ்லீம் ஆயுதக்குளுவின் சூத்திரதாரி சென்னை மண்ணடிக்கு சென்று வந்துள்ளதாக தமிழ் நாட்டு கியூ பிரிவு பொலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதை தொடர்ந்து தொடர் விசாரணையில் ஈடுபட்ட அவர்கள் நேற்று மண்ணடியில் உள்ள ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னை பூந்தமல்லியில் உள்ள கோல்டன் அபார்ட்மெண்ட்டில் ரகசியமாக தங்கியிருந்த ஸ்ரீலங்காவினை சேர்ந்த 3 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் அங்கேயே தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் ஸ்ரீலங்காவின் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? எதற்காக அங்கே வந்து தங்கியிருக்கிறார்கள்? பாஸ்போர்ட்-விசா உள்ளிட்ட ஆவணங்களை முறையாக வைத்திருக்கிறார்களா? என்று விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணைக்கு பிறகு இவர்களுக்கும், கொழும்பில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கும் சம்பந்தம் இருக்கிறதா?என்பது தெரியவரும்.  ஆனால் விசாரணை நடப்பதை ஒத்துக்கொண்ட கியூ பிரிவு போலீசார் பிடிபட்ட 3 பேரின் விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.