கட்டுநாயக்கா விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

breaking
சர்வதேக ஆயுதக்குழுக்களுடன் தொடர்புடையவர்கள் ஸ்ரீலங்காவிற்குள் வருவதை தடுக்கும் நடவடிக்கையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச பொலீசாரின் தகவல்களை தொடர்ந்து சர்வதேச ஆயுதக்குழுவுடன் சம்மந்தப்ட்ட அமைப்பினை சேர்ந்தவர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கையில் புதிய தொழில்நுட்பத்துடனான நடவடிக்கையினை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதேவேளை ஸ்ரீலங்காவில் இருந்து வெளியேறும் நபர்கள் தொடர்பிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.