ஆயுதங்களை இராணுவத்திடம் ஒப்படைக்க இரண்டு நாள் காலக்கெடு!

breaking
இராணுவ சீருடை போன்ற ஆடைகள், கத்திகள் மற்றும் வாள்களை அருகில் இருக்கும் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறு பொதுமக்களுக்கு 2 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை தொடர்ந்து பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது வெடிபொருட்கள் ஆயுதங்களுடன் பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்றும் நாளையும் பொதுமக்கள் தங்களிடமிருக்கும் இராணுவ சீருடை போன்ற ஆடைகள், கத்திகள் மற்றும் வாள்களை சிறிலங்கா பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.