6 ற்கு மேற்பட்டவர்களிற்கே 6 ஆம் திகதி பாடசாலை

breaking
  இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை மறுதினம் (06) பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எனினும், 6 ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளே இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் அரசாங்கத்தினால் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.   இதே வேளை இந்த தீர்மானம் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையும் நிலவி வருகிறது