பிரான்சில் புலன்மொழி வளத்தேர்வு 2019 இன்று ஆரம்பம் !

breaking
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் நடாத்தும் புலன்மொழி வளத்தேர்வு இன்று 04.05.2019 சனிக்கிழமை சிறப்பாக ஆரம்பமாகியது.
இன்று காலை 7 மணியளவில் அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தில் அதன் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார்,தேர்வுப்பொறுப்பாளர் அகிலன் முன்னிலையில் தேர்வுத்தாள் மண்டபப் பொறுப்பாளர்களிடம் கையளிக்கப்பட்டன.
இம்முறை பிரான்சில் Île De France மற்றும் பிரான்சின் வெளிமாவட்டங்களிலும் (ஸ்ரார்ஸ்பேர்க்,நீஸ்,போர்சோலை,முலுஸ்,துளுஸ்,றென்,தூர்,ஜியான்,போ,போர்தோ1, போர்தோ2, நெவர்) மொத்தம் 6 ஆயிரத்து 85 மாணவர்கள் தேர்வுக்குத் தோற்றவுள்ளதுடன் 350 இற்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கடமையாற்றவுள்ளனர்.
இன்று 04.05.2019 சனிக்கிழமை 21 தேர்வு நிலையங்களிலும் நாளை 05.05.2019 ஞாயிற்றுக்கிழமை 10 தேர்வு நிலையங்களிலும் வரும் 12.05.2019 ஞாயிற்றுக்கிழமை 17 தேர்வு நிலையங்களிலும் புலன்மொழி வளத்தேர்வு கேட்டல், பேசுதல், வாசித்தல் என்ற பிரிவுகளில் நடைபெற ஏற்பாடகியுள்ளதாகவும் தமிழ்மொழி எழுத்துத் தேர்வு வரும் 01.06.2019 சனிக்கிழமை வழமைபோன்று LA MAISON DE EXAMENS 7,RUE RUE ERNEST RENAN 94114 ARCEIL (RER – B LA PLACE) என்ற முகவரியில் இடம்பெறவுள்ள அதேவேளை பிரான்சின் வெளிமாவட்டங்களிலும் இடம்பெறவுள்ளது எனத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.
           
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு-ஊடகப்பிரிவு)