நீர்கொழும்பு போராத்தோட்டையில் சிங்கள, முஸ்லிம் சமூகத்தினரிற்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.இதன்போது சில முச்சக்கர வண்டியில் எரியூட்டபட்டுள்ளதாகவும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் மேலதிக படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அந்த பகுதியில் காவல்துறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
காலை 7 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்குமென பொலிசார் அறிவித்துள்ளனர்.