'ஒரு பை வேணும்': கவிஞர் பொன். காந்தனின் காலத்திற்கேற்ற கவிதை

breaking
  ஐயா பை ஒன்று தாங்கோ படு கறுப்பும் வேண்டாம் பஞ்சவர்ணத்திலும் வேண்டாம் பின்னுக்கு கொழுவுறதும் வேண்டாம் பெரிதாயும் வேண்டாம் ஆகச் சிறிதாயும் வேண்டாம் ஆங்கிலம் அரபு எழுத்துப்போட்டதும் வேண்டாம் இழுத்துப் பூட்டுறதும் வேண்டாம் ஆக ஓவெண்டும் வேண்டாம் அப்பட்டமாய் உள்ளே எல்லாம் அம்பலத்தில் தெரியிற மாதிரி புட்டோ இடியப்பமோ போண்டாவோ இட்டலியோ கட்டிய பார்சலும் தட்டிப்பார்க்காமலே தரணிக்கே தெரியும்படியாய் ஒரு தட்டி மறைப்பு இல்லாமல் குஞ்சம் கொடிகள் இல்லாமல் குறிகள் குற்றுக்கள் பறவைகள் மிருகங்கள் இல்லாமல் வெறுமனே ஒரு பை திறந்து பார்க்காமல் கொடிகாமத்திலிருந்து பார்த்தால் கைதடி சந்திக் கைப்பையில் அடியில் இருக்கின்ற அரை இஞ்சி ஊசியும் தெளிவுறக் காண்பதுவாய் ஐயா ஒரு பை வேணும் இல்லையெனில் தையல் கூலி ஒரு ஐந்து பத்து இலட்சம் ஆனாலும் பரவாயில்லை உள்ளே இருப்பதை உலகமே பார்க்கும் படியாய் மெய்யாய் ஒரு பை வேணும் இப்போதைக்கு இதுபோதும் இனியும் நாளை ஏதுமென்றால் எனக்கும் என் மனையாளுக்கும் பைபோல ஒரு கவுணும் காற்சட்டையும் தைத்து உதவவேணும் இனியாரும் குண்டை கொண்டைக்குள் காவி வந்தால் மறுநாள் மக்கள் அனைவருக்கும் மண்டை மட்டும்தான் இருக்கும் மசிர் இருக்காது இண்டைய நாட்டு நிலைமையில் இப்படித்தான் யோசிக்கவேணும் நன்றி ✍? பொன் காந்தன்.