முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆவது ஆண்டில் டென்மார்க் தலைநகரில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி!

breaking
முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல்  வாரத்தின்  முதல்  நிகழ்வாக கண்காட்சி  13.05.19   அன்று  டென்மார்க்  தலைநகர  நகர  சபை முன்றலில் ஆரம்பமானது. முள்ளிவாய்க்காலில் இனஅழிப்பு செய்யப்பட்ட  மக்களை  நினைவு  கூர்ந்து ஈகச்சுடரேற்றி,  அகவணக்கத்துடன்  ஆரம்பிக்கப்பட்டது.  முள்ளிவாய்க்கால்  மண்ணில்  குழந்தைகள்,  பெண்கள், வயோதிபர்கள் என எந்தவித  வேறுபாடும்   இன்றி  தமிழன் என்ற காரணத்தினால் இரத்த வெறி பிடித்த அரச பயங்கரவாதம்  எம்   உறவுகளை   கொத்துக்கொத்தாய்  கொன்று  குவித்தது.
 
அந்தக்காட்சிகளையே  இன்று கண்காட்சிகளாக வைத்து,  பல்லின மக்களுக்கு காட்டி, சர்வதேசத்திடம்   எமது  மக்களுக்கு  நீதி வேண்டி நிற்கிறோம்.  கண்காட்சி  நடைபெறும்  இடத்தில்  வேற்றின மக்களுக்கு  துண்டுப்பிரசுரங்களும்  வழங்கி  அவர்களுடன்   கலந்துரையாடல்களிலும் செயற்பாட்டாளர்கள்  ஈடுபட்டனர்.
 
18.05.19  அன்று  தமிழின அழிப்பிற்கு நீதி கோரி மாபெரும் பேரணி  டென்மார்க்  பாராளுமன்ற முன்றலில்  மு.ப 11 மணிக்கு ஆரம்பித்து  தலைநகர  நகரசபை  முன்றலில்  நிறைவடையும் . நகரசபை முன்றலில் தமிழ்  இன அழிப்பு   செய்யப்பட்ட  மக்களிற்கான வணக்க நிகழ்வும் நடைபெறும். இன்று (13.05.19) நடைபெற்ற கண்காட்சியை Holbæk நகர செயற்பாட்டாளர்கள் செய்தார்கள். எம் இதயச்சுவர்களில்  வலிகளால் பதியப்பட்ட  அந்த  நாட்களை நினைவு கூர்ந்து உறங்கிக்கிடக்கும்  மனச்சாட்சிகளை மீண்டுமொரு முறை தட்டிஎழுப்புவோம். எம்உறவுகளுக்காய் நீதி கேட்போம். உறவுகளை  இழந்தவரின்  உரிமைக்காய்  அனைவரும்  ஒன்றிணைந்து  குரல் கொடுப்போம் . வாருங்கள் எம் தாயக உறவுகளே!
 
டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்
DSTF