அடுத்த தாக்குதல்கள் இந்து கோவில்களாகவோ அல்லது பௌத்த விகாரைகளாகவோ இருக்கலாம்.!

breaking
அடுத்த தாக்குதல்கள் இந்து கோவில்களாகவோ அல்லது பௌத்த விகாரைகளாகவோ இருக்கலாம் என சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மகால்கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மகாகந்தே சுதத்த தேரர் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மகால்கந்தே சுதத்த தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்து மற்றும் பௌத்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கூட்டமைப்புடன் இணைந்து குழுவொன்றினை நியமித்து அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற யோசனை ஒன்றினையும் அவர் இதன்போது முன்வைத்துள்ளார்.