ஒவ்வொரு வருடமும் மே மாதக் காலப்பகுதியில் நடாத்தப்படும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வேற்றினத்தவர்கள் பார்வையிடக் கூடியதுமான இம் மரதன் ஓட்டப் போட்டியில் எமது தமிழின அழிப்பினை தொடர்ச்சியாக வெளிக்கொணரவேண்டிய தேவை உள்ளதனால் சுவிசில் இப்போட்டிகளில் பங்குபற்ற ஆர்வமுள்ளவர்கள் எம்மை அணுகுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
அத்துடன் 18.05.2019 சனிக்கிழமை தமிழின அழிப்புநாளில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் சுவிஸ் வாழ் அனைத்து உறவுகளையும் பேர்ண் பாராளுமன்றம் அருகாமையில் அமைந்துள்ள Waisenhausplatz திடலில் அணிதிரளுமாறு அன்புரிமையுடன் இத்தருணத்தில் கேட்டுக் கொள்கின்றோம்.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு